யாழில் விரிவுரையாளர் வீட்டில் கொள்ளை!!

யாழ்.கொக்குவில்- கருவேலடி ஒழுங்கையில் பகல்வேளையில் வீட்டை உடைத்து உட்பு குந்த கொள்ளையா்கள் வீட்டிலிருந்த தாலிக்கொடி உள்ளிட்ட 15 பவுண் நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர்.


பல்கலைக் கழக விரிவுரையாளர் ஒருவருடைய வீட்டிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

நேற்று காலை 10 மணிக்கும் 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள் சாமி அறையை உடைத்து உட்புகுந்து சகல இடங்களும் சல்லடையிடப்பட்டு தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

அதோடு படுக்கை அறையில் இருந்த அலுமாரிகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த 11 பவுண் தாலிக்கொடி மற்றும் காப்பு உள்ளிட்ட 15 தங்கப்பவுண் நகைகளும் ஒரு தொகைப் பணமும் களவாடப்பட்டுள்ளது.

இதேவேளை 11 மணியளவில் குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்ற நிலையில் இது தொடர்பில் 119 மற்றும் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

எனினும் சும்மார் 3 மணிநேரத்தின் பின்னரே பிற்பகல் 2 மணியளவில் அங்கு வருகை தந்த பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பலரும் விடனம் வெளியிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.