குழந்தைகள் அணியும் முகமூடிகளை அணிந்து சாதாரணமாக கொள்ளையடித்த கொள்ளையர்கள்!

திருச்சி லலிதா ஜூவல்லரியில் விலங்குகளின் முகமூடியை அணிந்து கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரியில் மர்ம நபர்கள், கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்து, சுமார் 36 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ நகைகளை அள்ளிச்சென்றுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நகைக்கடையில் இருந்த சிசிடிவியில் பதிவான கொள்ளையர்களின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், விலங்குகளின் முகமூடியை அணிந்து கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

குழந்தைகள் வைத்து விளையாடும் முகமூடிகளை அணிந்து 2 பேர் சாதாரணமாக நடந்து சென்று நகைகளை சுருட்டி சென்றுள்ளனர். அதிகாலை 2.11 மணி முதல் 3.15 மணிக்குள் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.