கோவிலுக்கு நிலத்தை தானமாக கொடுத்த தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது !

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே  கோவிலுக்கு நிலத்தை தானமாக எழுதி கொடுத்த தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை வாழப்பாடி போலீசார் கைது செய்யத  சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கன்(வயது 75). விவசாயி. இவருக்கு வசந்தா என்கிற மனைவியும் ரமேஷ் (50)ஜெகதீஷ் (45) என்ற 2 மகன்களும் மஞ்சுளா (40) செல்வி (37) என்ற 2 மகள்களும் உள்ளனர்.
இவர் சின்னமநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள  பெருமாள் கோவிலுக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து கோவில் கும்பாபிசேகம் நடத்தி உள்ளார். இந்த நிலையில்  25 சென்ட் நிலமும் தானமாக கோவிலுக்கு பொதுவில்  எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.
 இந்த நிலையில் ரங்க கவுண்டர் வீட்டிற்கு இன்று வந்த அவரது மூத்த மகன் ரமேஷ் கோவிலுக்கு பணம் கொடுத்ததையும்,  நிலம் எழுதி கொடுத்ததை எதிர்த்து   தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ஏற்பட்ட வாய் தகராறில் அங்கிருந்த கட்டையால் தந்தையை பலமாக தாக்கியுள்ளார் இந்த சம்பவத்தில் ரங்க கவுண்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரங்கனின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மனைவி வசந்தா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார் ரங்கனின் மூத்த மகன் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.