சஜித் வென்றதும் ரணில் நீக்கப்படுவார் ?
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு, தமது தரப்பை சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்க போவதாக ராஜாங்க அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளதாகவும் இதனால், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மீண்டும் நெருக்கடி அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சஜித் அணியின் முக்கிய உறுப்பினராக அஜித் பீ. பெரேரா, ரணிலை பதவியில் இருந்து நீக்கும் கதையை தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதுடன் பின்னர் அதனை பகிரங்கமாக கூற ஆரம்பித்துள்ளார்.
இது குறித்து தகவலை அறிந்து கொண்ட பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது புலனாய்வாளர்கள் மூலம் அதனை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலதிகமாக தேடிப்பார்த்த போது சஜித் அணியினர் திட்டமிட்ட வகையில் இதனை பிரசாரப்படுத்தி வருவதுடன் இது சம்பந்தமாக வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும் அஜித் பீ. பெரேரா மட்டுமல்ல மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால், வெறுப்படைந்துள்ள பிரதமர், சஜித் அணியினருக்கு தேவையான வகையில் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க இடமளித்து அதில் இருந்து முற்றாக விலகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தீர்மானகரமான தேர்தல் நெருங்கி இருக்கும் நேரத்தில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கூட அல்லாத, மூன்றாம் நிலை உறுப்பினரான அஜித் பீ. பெரேரா போன்றவரை பயன்படுத்தி தனக்கு எதிராக கட்சிக்குள் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவது தொடர்பாக ரணில் விக்ரமசிங்க கடும் கோபத்திலும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 13ஆம் திகதியில் இருந்து தேர்தல் தொடர்பாக ஊடக சந்திப்புகளை சஜித் பிரேமதாசவின் வோக்சோல் வீதியில் உள்ள தேர்தல் பிரசார தலைமை அலுவலகம், அலரி மாளிகை, சிறிகொத்த ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. அலரி மாளிகை மற்றும் சிறிகொத்தவில் ஏற்பாடு செய்யப்படும் ஊடக சந்திப்புகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை குறுகிய காலத்தில் மிகவும் மோசமான நேரத்தில் மீண்டும் களத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
சஜித் அணியின் முக்கிய உறுப்பினராக அஜித் பீ. பெரேரா, ரணிலை பதவியில் இருந்து நீக்கும் கதையை தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதுடன் பின்னர் அதனை பகிரங்கமாக கூற ஆரம்பித்துள்ளார்.
இது குறித்து தகவலை அறிந்து கொண்ட பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது புலனாய்வாளர்கள் மூலம் அதனை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலதிகமாக தேடிப்பார்த்த போது சஜித் அணியினர் திட்டமிட்ட வகையில் இதனை பிரசாரப்படுத்தி வருவதுடன் இது சம்பந்தமாக வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும் அஜித் பீ. பெரேரா மட்டுமல்ல மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால், வெறுப்படைந்துள்ள பிரதமர், சஜித் அணியினருக்கு தேவையான வகையில் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க இடமளித்து அதில் இருந்து முற்றாக விலகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தீர்மானகரமான தேர்தல் நெருங்கி இருக்கும் நேரத்தில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கூட அல்லாத, மூன்றாம் நிலை உறுப்பினரான அஜித் பீ. பெரேரா போன்றவரை பயன்படுத்தி தனக்கு எதிராக கட்சிக்குள் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவது தொடர்பாக ரணில் விக்ரமசிங்க கடும் கோபத்திலும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 13ஆம் திகதியில் இருந்து தேர்தல் தொடர்பாக ஊடக சந்திப்புகளை சஜித் பிரேமதாசவின் வோக்சோல் வீதியில் உள்ள தேர்தல் பிரசார தலைமை அலுவலகம், அலரி மாளிகை, சிறிகொத்த ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. அலரி மாளிகை மற்றும் சிறிகொத்தவில் ஏற்பாடு செய்யப்படும் ஊடக சந்திப்புகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை குறுகிய காலத்தில் மிகவும் மோசமான நேரத்தில் மீண்டும் களத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை