கொக்குவில் இந்துக் கல்லூரிப் படுகொலை நினைவு நாள் இன்றாகும்!!
கொக்குவிற் கிராமம் யாழ். மாவட்டத்தில் நல்லூர் பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ளது. யாழ். நகரிலிருந்து காங்கேசன்துறை வீதியூடாகச் செல்லும் வழியில் ஏறக்குறைய யாழ். நகரிலிருந்து நான்கு மைல் தூரத்திலுள்ள கொக்குவிற் சந்திக்குக் கிழக்குப் புறமாக கொக்குவில் இந்துக் கல்லூரி அமைந்துள்ளது.
1987 ஒக்டோபர் பத்தாம் நாள் இந்திய இராணுவத்திற்கும் – புலிகளுக்கும் இடையில் யுத்தம் தொடங்கிய பின்னர் இந்திய இராணுவத்தின் பரவலான விமானக்குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலுக்கு அஞ்சி கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்புக்கருதி கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சமடைந்தார்கள். அத்துடன் தங்களை அகதிகள் என அடையாளப்படுத்தும் நோக்குடன் பாடசாலையின் முக்கிய இடங்களில் வெள்ளைக் கொடியைப் பறக்கவிட்டனர். 1987 ஒக்டோபர் இருபத்துநான்காம் நாள் காங்கேசன்துறை வீதி வழியாக யாழ். நகரம் நோக்கிக் கவசவாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் படையினர் கொக்குவில் இந்துக் கல்லூரியை வந்தடைந்ததும், கவச வாகனங்களிலிருந்து அங்கு அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்கள் தங்கியிருந்த பாடசாலை கட்டிடங்கள் மேல் பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டனர். இதனால் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருந்த இருபத்தாறு பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.
படுகாயமடைந்தவர்களில் பதின்நான்கு பேர் மருத்துவ வசதிகளற்று உள்ளூர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலும், மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் யாழ். பல்கலைக்கழக கல்வியற்துறைப் பீடாதிபதி பேராசிரியர் சந்திரசேகரம் உட்பட மொத்தம் நாற்பது பேர் உயிரிழந்ததுடன், எண்பது பேர் படுகாயமடைந்தனர்.
உரிய முறைப்படி தகனம் செய்வதற்கான சூழ்நிலையில்லாததால் இறந்தவர்களின் சடலங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஒரே குழியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.
24.10.1987 அன்று கொக்குவில் இந்தக் கல்லூரியில் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:
01. இராசையா பஞ்சலிங்கம் (வயது 43)
02. இராசையா செல்வராணி (வயது 37)
03. இராமு இராசு (வயது 60 – கமம்)
04. நாகரத்தினம் விஜயரத்தினம் (வயது 46)
05. நடராசா இராசகுமாரன் (வயது 44)
06. நடராசா இராசராசேஸ்வரி (வயது 24)
07. நடராசா குணராணி (வயது 35)
08. நடராசா தமிழ்ச்செல்வி (வயது 10 – மாணவி)
09. நடராசா சபேஸ்குமார் (வயது 06 – மாணவன்)
10. நடராசா ரமதி (வயது 13 – மாணவி)
11. நடேசு பரமேஸ்வரி (வயது 51)
12. நல்லையா பாக்கியம் (வயது 50)
13. கந்தையா சங்கரப்பிள்ளை (வயது 65 – வியாபாரம்)
14. கந்தவனம் மகேஸ்வரி (வயது 52)
15. குணபாலசிங்கம் பத்மசிறி (வயது 08 – மாணவன்)
16. பரமு தங்கமணி (வயது 24 – வீட்டுப்பெண்)
17. பரமேஸ்வரன் மனோன்மணி (வயது 35)
18. பரமேஸ்வரன் மாலினி (வயது 01)
19. தர்மலிங்கம் நிசாந்தன் (வயது 02)
20. துரைச்சாமி குமாரசாமி (வயது 72 – முதியவர்)
21. தம்பிராசா நடராசா (வயது 61 – முதியவர்)
22. வேணுகோபால் மகாதேவன் (வயது 41)
23. மகாதேவன் இராசம்மா (வயது 28)
24. மகாதேவன் பாலமுருகன் (வயது 09 – மாணவன்)
25. மகாதேவன் வேணுகிருஸ்ணா (வயது 07 – மாணவன்)
26. மகாதேவன் விக்கினேஸ்வரன் (வயது 10 – மாணவன்)
27. அன்னசிங்கம் கமலாதேவி (வயது 33 – வீட்டுப்பணி)
28. பெரியதம்பி இராசையா (வயது 30)
29. பேராசிரியர் சோ.சந்திரசேகரம் (பேராசிரியர்)
30. செல்வநாயகம் மாணிக்கரத்தினம் (வயது 69 – முதியவர்)
31. செல்லர் திரவியம் (வயது 53)
32. சுப்பிரால் கோவிந்தசாமி (வயது 72 – முதியவர்)
33. சிவகுரு செல்லத்துரை (வயது 85 – முதியவர்)
34. விஸ்வநாதி விஜயரத்தினம் (வயது 40 – கூலி)
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.
1987 ஒக்டோபர் பத்தாம் நாள் இந்திய இராணுவத்திற்கும் – புலிகளுக்கும் இடையில் யுத்தம் தொடங்கிய பின்னர் இந்திய இராணுவத்தின் பரவலான விமானக்குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலுக்கு அஞ்சி கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்புக்கருதி கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சமடைந்தார்கள். அத்துடன் தங்களை அகதிகள் என அடையாளப்படுத்தும் நோக்குடன் பாடசாலையின் முக்கிய இடங்களில் வெள்ளைக் கொடியைப் பறக்கவிட்டனர். 1987 ஒக்டோபர் இருபத்துநான்காம் நாள் காங்கேசன்துறை வீதி வழியாக யாழ். நகரம் நோக்கிக் கவசவாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் படையினர் கொக்குவில் இந்துக் கல்லூரியை வந்தடைந்ததும், கவச வாகனங்களிலிருந்து அங்கு அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்கள் தங்கியிருந்த பாடசாலை கட்டிடங்கள் மேல் பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டனர். இதனால் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருந்த இருபத்தாறு பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.
படுகாயமடைந்தவர்களில் பதின்நான்கு பேர் மருத்துவ வசதிகளற்று உள்ளூர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலும், மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் யாழ். பல்கலைக்கழக கல்வியற்துறைப் பீடாதிபதி பேராசிரியர் சந்திரசேகரம் உட்பட மொத்தம் நாற்பது பேர் உயிரிழந்ததுடன், எண்பது பேர் படுகாயமடைந்தனர்.
உரிய முறைப்படி தகனம் செய்வதற்கான சூழ்நிலையில்லாததால் இறந்தவர்களின் சடலங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஒரே குழியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.
24.10.1987 அன்று கொக்குவில் இந்தக் கல்லூரியில் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:
01. இராசையா பஞ்சலிங்கம் (வயது 43)
02. இராசையா செல்வராணி (வயது 37)
03. இராமு இராசு (வயது 60 – கமம்)
04. நாகரத்தினம் விஜயரத்தினம் (வயது 46)
05. நடராசா இராசகுமாரன் (வயது 44)
06. நடராசா இராசராசேஸ்வரி (வயது 24)
07. நடராசா குணராணி (வயது 35)
08. நடராசா தமிழ்ச்செல்வி (வயது 10 – மாணவி)
09. நடராசா சபேஸ்குமார் (வயது 06 – மாணவன்)
10. நடராசா ரமதி (வயது 13 – மாணவி)
11. நடேசு பரமேஸ்வரி (வயது 51)
12. நல்லையா பாக்கியம் (வயது 50)
13. கந்தையா சங்கரப்பிள்ளை (வயது 65 – வியாபாரம்)
14. கந்தவனம் மகேஸ்வரி (வயது 52)
15. குணபாலசிங்கம் பத்மசிறி (வயது 08 – மாணவன்)
16. பரமு தங்கமணி (வயது 24 – வீட்டுப்பெண்)
17. பரமேஸ்வரன் மனோன்மணி (வயது 35)
18. பரமேஸ்வரன் மாலினி (வயது 01)
19. தர்மலிங்கம் நிசாந்தன் (வயது 02)
20. துரைச்சாமி குமாரசாமி (வயது 72 – முதியவர்)
21. தம்பிராசா நடராசா (வயது 61 – முதியவர்)
22. வேணுகோபால் மகாதேவன் (வயது 41)
23. மகாதேவன் இராசம்மா (வயது 28)
24. மகாதேவன் பாலமுருகன் (வயது 09 – மாணவன்)
25. மகாதேவன் வேணுகிருஸ்ணா (வயது 07 – மாணவன்)
26. மகாதேவன் விக்கினேஸ்வரன் (வயது 10 – மாணவன்)
27. அன்னசிங்கம் கமலாதேவி (வயது 33 – வீட்டுப்பணி)
28. பெரியதம்பி இராசையா (வயது 30)
29. பேராசிரியர் சோ.சந்திரசேகரம் (பேராசிரியர்)
30. செல்வநாயகம் மாணிக்கரத்தினம் (வயது 69 – முதியவர்)
31. செல்லர் திரவியம் (வயது 53)
32. சுப்பிரால் கோவிந்தசாமி (வயது 72 – முதியவர்)
33. சிவகுரு செல்லத்துரை (வயது 85 – முதியவர்)
34. விஸ்வநாதி விஜயரத்தினம் (வயது 40 – கூலி)
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.
கருத்துகள் இல்லை