மன்னாரில் சஜித்தை ஆதரிக்கும் மக்கள் கூட்டமும், காரியதரிசிகளும்!!

மன்னாரில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் மக்கள் கூட்டமும், காரியாலயம்  திறந்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.


குறித்த நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் கலந்து கொண்டுள்ளார்.

அரச அதிகாரிகள் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ள கூடாது என தேர்தல் திணைக்களத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள போதும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளராக உயர் பதவியில் உள்ள அரச அதிகாரி கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.