OMP போலி அலுவலகம் தமிழர் தாயகத்தை விட்டு வெளியேற கோரி தொடர் போராட்டம் தொடர்கிறது.!!

இன்று 26வது நாள் யாழ்ப்பாணம்11.10.2019.OMP போலி அலுவலகம் தமிழர் தாயகத்தை விட்டு வெளியேற கோரி தொடர் போராட்டம் தொடர்கிறது.
இன்று ஐநா பணியாளர்கள் தொடர் போராட்டம் நடைபெறும் ராஜராஜேஸ்வரி ஆலயல முன்றலில் அமைந்துள்ள பந்தலில் காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்களை சந்தித்தனர்,

அவர்களின் போராட்ட கோரிக்கைகளை பதிவு செய்தனர்,தாய்மார் கூறியதாவது எங்கள் போராட்டங்களை நீர்த்து போக செய்யவும்,எமது பிள்ளைகளுக்கு மரணச்சான்றிதல் தந்து எமக்கு 6000ரூபா லஞ்சமும் தந்து,ஐநாவையும் உலக நாடுகளையும் ஏமாற்றி,போர்க்குற்றவாளிகளை
பாதுகாத்து,தமிழர்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பான அரசியல் தீர்வு தராமல் ஏமாற்றவும்,சர்வதேச தலையீட்டை தடுக்கவும் தான்
இந்த போலி OMPஅமைப்பை
சிங்கள பேரினவாதம் பயன்படுத்துகிறது.இது மிகவும் ஆபத்தானது இனப்படுகொலை உள்ளான தமிழர்களை மோசமாக ஏமாற்றம் பாரிய
மனித உரிமை மீறல் என்றும்,
எமக்கான நிரந்தரமான சுதந்திரமான பாதுகாப்பான தீர்வுக்காக தமிழர்கள் தொடர்ந்து போராடுவோம் இதற்கு ஐநாவின் பூரண ஆதரவை தரவேண்டும் எனவும்
கோரினர்.அனைத்தையும் ஆர்வத்துடன் பதிவு செய்தனர்
தாம் இதை அறிக்கையாக ஐநா
கொண்டு செல்வோம் என்று தெரிவித்தனர்.
தகவல் இணைத்தலைவி சுகந்தி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.