மாணவர்கள் அரசியலைப் பார்த்து ஒதுங்கக் கூடாது: கமல்!

கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்பதால்தான் அரசியலில் கறை படிந்து இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இன்று (அக்டோபர் 1) லயோலா கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் அரசியலைப் பார்த்து மாணவர்கள் ஒதுங்கிக் கொள்ளக் கூடாது என்றார். தொடர்ந்து பேசிய அவர், கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்பதால் தான் அரசியலில் கறை படிந்துள்ளது. நான் பேசுவது அரசியல் தான் அதில் சந்தேகம் வேண்டாம். 


அரசியல் பேசாமல் கல்வி விவசாயம் ஆகிய துறைகள் முன்னேறாது. மொழி என்பது ஒரு கருவி தான், அதனை திணிக்கக்கூடாது, நாம் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை, நிர்வாகம் முடிவு செய்யமுடியாது என்றார்.
மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒரு திறனையாவது வளர்க்க வேண்டும். குடும்ப அரசியல் தான் தமிழகத்தில் செய்ய முடியும் என்றால் நான் எனது குடும்பத்தைப் பெரிது படுத்திக் கொள்வேன். 

இளைஞர்களே என்னுடைய குடும்பம். தமிழகத்தில் இளைஞர்களின் வேலை இழப்பைச் சரிசெய்ய வேண்டுமென்றால், கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினார் கமல். தொடர்ந்து மாணவர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.