வவுனியாவில் பாதுகாப்பு அதிகரிப்பு!

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வவுனியாவிற்கு இன்று பிரசாரத்திற்கு வருகை தந்ததையொட்டி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.


வவுனியா வைரவ புளியங்குளம் சிறுவர் பூங்காவில் பிரசாரக்கூட்டம் இடம்பெற்றிருந்தது. இதன்போது கோத்தபாய மற்றும் அரசியல் பிரதிநிதிகள் வருகைக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கோடு நகர்ப்பகுதியெங்கும் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கியிருந்ததுடன் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதேவேளை யாழ் வீதி, மன்னார் வீதி உட்பட நகருக்குள் நுழையும் பகுதிகளெங்கும் பாதுகாப்பு தடைகள் போடப்பட்டு வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது.

இந் நிலையில் நகர்ப்பகுதியில் அதிகளவான புலனாய்வாளர்களும் கடமையில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.