‘டோறா’ மற்றும் கூகர் மூழ்கடிப்பு சமரின் நாயகர்களுக்கு வீரவணக்க நாள்.!
சிறிலங்கா கடற்படையின் ‘டோறா’ கலம் மற்றும் கூகர் படகினை மூழ்கடிப்பில் வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி லெப். கேணல் பதுமன், கடற்கரும்புலி லெப். கேணல் புலிக்குட்டி, கடற்கரும்புலி லெப். கேணல் கண்ணன், கடற்கரும்புலி மேஜர் கலைமதி, கடற்கரும்புலி மேஜர் செந்தூரன், கடற்கரும்புலி கப்டன் அகச்சேரன், கடற்கரும்புலி கப்டன் கொள்கைக்கோன் உட்பட ஏனைய வெவ்வேறு சம்பவங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ஏனைய மாவீரர்களின் 11 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காட்டுக்கு நேரான கடற்பரப்பில் 01.11.2008 அன்று சனிக்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்புலிகள் அணியை சிறிலங்கா கடற்படையின் கூகர்-நீருந்து விசைப் படகுகள் மற்றும் விசைப்படகுகள் வழிமறித்து தாக்குதலை நடத்தின.
சுமார் 15 நிமிட நேரம் கடற்புலிகள் அணிக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றது.
கடற்புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத சிறிலங்கா கடற்படையினர் பின்வாங்கிச் சென்றனர்.
இதன் பின்னர், இன்று அதிகாலை 5:20 நிமிடமளவில் கடற்புலிகளின் படகுகள் நாகர்கோவில் கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த போது, பருத்தித்துறையிலிருந்து ஆழ்கடல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு டோறா பீரங்கிப் படகுகள், நீருந்து விசைப்படகுகள், கடற்படையின் கொமாண்டோக்களுக்காக வடிவமைக்கப்பட்ட கூகர் படகு உள்ளிட்ட 20 படகுகளுடன் கடற்புலிகளினதும் கடற் கரும்புலிகளினதும் படகுகளை தாக்கியழிக்க சிறிலங்கா கடற்படையினர் வியூகம் அமைத்து காத்திருந்தனர்.
இந்த வியூகத்தை கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் இணைந்து தீவிர தாக்குதல் மூலம் உடைத்தெறிந்தனர்.
இதில் டோறா பீரங்கிப்படகு ஒன்றும் கூகர் கலம் ஒன்றும் கடற்புலிகளாலும் கடற்கரும்புலிகளாலும் அந்த இடத்திலேயே தாக்கி மூழ்கடிக்கப்பட்டன.
அத்துடன் கரையோர நீருந்து விசைப்படகு ஒன்று கடுமையாக சேதமாக்கப்பட்டது. ஏனைய பல படகுகள் சேதங்களுக்குள்ளாகின.
அதேவேளை, சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகளும் கடற்படையினருடன் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன் தரையிலிருந்து பல்குழல் வெடிகணைத் தாக்குதலை சிறிலங்கா தரைப்படையினர் நடத்தினர்.
கடற்புலிகளின் தீவிரமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது சிறிலங்கா கடற்படையினர் காங்கேசன்துறைக்கு பின்வாங்கி ஓடினர்.
இத்தாக்குதலில் சிறிலங்கா கடற்டையைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். கடற்படையினருக்கு அழிவை ஏற்படுத்திய இம்மோதலில் கடற்கரும்புலிகள் ஏழு பேர் வீரச்சாவடைந்துள்ளனர்.
விடியலுக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்
இதே நாளில்
திருமலை மாவட்டம் செல்வநாயகபுரம் பகுதியில் 01.11.1993 அன்று சிறிலங்கா இராணுவத்தினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் மூர்த்தி, லெப். இன்பன் / யோகேஸ் ஆகிய மாவீரர்களின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “சூரியக்கதிர் 01” படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 30.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 2ம் லெப். இளமாறன், வீரவேங்கை வண்ணன் ஆகிய மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
கிளிநொச்சி கோட்டத்தில் 01.11.1997 அன்று சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 2ம் லெப். பூமளா ஆகிய மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காட்டுக்கு நேரான கடற்பரப்பில் 01.11.2008 அன்று சனிக்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்புலிகள் அணியை சிறிலங்கா கடற்படையின் கூகர்-நீருந்து விசைப் படகுகள் மற்றும் விசைப்படகுகள் வழிமறித்து தாக்குதலை நடத்தின.
சுமார் 15 நிமிட நேரம் கடற்புலிகள் அணிக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றது.
கடற்புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத சிறிலங்கா கடற்படையினர் பின்வாங்கிச் சென்றனர்.
இதன் பின்னர், இன்று அதிகாலை 5:20 நிமிடமளவில் கடற்புலிகளின் படகுகள் நாகர்கோவில் கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த போது, பருத்தித்துறையிலிருந்து ஆழ்கடல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு டோறா பீரங்கிப் படகுகள், நீருந்து விசைப்படகுகள், கடற்படையின் கொமாண்டோக்களுக்காக வடிவமைக்கப்பட்ட கூகர் படகு உள்ளிட்ட 20 படகுகளுடன் கடற்புலிகளினதும் கடற் கரும்புலிகளினதும் படகுகளை தாக்கியழிக்க சிறிலங்கா கடற்படையினர் வியூகம் அமைத்து காத்திருந்தனர்.
இந்த வியூகத்தை கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் இணைந்து தீவிர தாக்குதல் மூலம் உடைத்தெறிந்தனர்.
இதில் டோறா பீரங்கிப்படகு ஒன்றும் கூகர் கலம் ஒன்றும் கடற்புலிகளாலும் கடற்கரும்புலிகளாலும் அந்த இடத்திலேயே தாக்கி மூழ்கடிக்கப்பட்டன.
அத்துடன் கரையோர நீருந்து விசைப்படகு ஒன்று கடுமையாக சேதமாக்கப்பட்டது. ஏனைய பல படகுகள் சேதங்களுக்குள்ளாகின.
அதேவேளை, சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகளும் கடற்படையினருடன் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன் தரையிலிருந்து பல்குழல் வெடிகணைத் தாக்குதலை சிறிலங்கா தரைப்படையினர் நடத்தினர்.
கடற்புலிகளின் தீவிரமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது சிறிலங்கா கடற்படையினர் காங்கேசன்துறைக்கு பின்வாங்கி ஓடினர்.
இத்தாக்குதலில் சிறிலங்கா கடற்டையைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். கடற்படையினருக்கு அழிவை ஏற்படுத்திய இம்மோதலில் கடற்கரும்புலிகள் ஏழு பேர் வீரச்சாவடைந்துள்ளனர்.
விடியலுக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்
இதே நாளில்
திருமலை மாவட்டம் செல்வநாயகபுரம் பகுதியில் 01.11.1993 அன்று சிறிலங்கா இராணுவத்தினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் மூர்த்தி, லெப். இன்பன் / யோகேஸ் ஆகிய மாவீரர்களின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “சூரியக்கதிர் 01” படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 30.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 2ம் லெப். இளமாறன், வீரவேங்கை வண்ணன் ஆகிய மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
கிளிநொச்சி கோட்டத்தில் 01.11.1997 அன்று சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 2ம் லெப். பூமளா ஆகிய மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை