பயங்கரவாதி ஒருவர் காஷ்மீரில் கைது!

ஜம்மு – காஷ்மீரில் லஷ்கர் -இ- தொய்பா இயக்கத்தின் பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த கைது நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம், சோபூர் பகுதியில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவலொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தகவலையடுத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்ட பாதுகாப்பு படையினர், தனிஷ் அகமது சன்னா என்பவரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட  நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.