டெங்கு நுளம்பின் பரவல் மன்னாரில் அதிகரிப்பு!

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இது வரை நான்கு டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எஸ்.எம்.கில்றோய் தெரிவித்தார்.


இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போது ஏற்பட்டுள்ள மழை காரணமாக மன்னாரில் டெங்கு நுளம்பின் பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை 4 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் வெளிமாவட்டங்களான புத்தளம், கொழும்பு மற்றும் யாழ் மாவட்டங்களில் இருந்து மன்னார் வந்தவர்களிலே குறித்த தாக்கம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் உரிய வடிகான் அமைப்பு இல்லாத நிலையில் அண்மையில் பெய்த மழை காரணமாக மழை நீர் தேங்கி காணப்படுகின்றது. இதனால் ஏனைய நுளம்புகளின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக மன்னாரில் டெங்கு நுளம்பின் உற்பத்தியை கட்டுப்படுத்த மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், தற்போது தேசிய டெங்கு ஒழிப்பு வார வேலைதிட்டம் மன்னார் சுகாதர வைத்திய அதிகாரி பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பணியில் பொலிஸார், சுகாதார ஊழியர்கள் இணைந்து பொது மக்களின் உதவியுடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.