பள்ளத்தில் வீழ்ந்தது பேருந்து -மூவர் காயம்!!

போக்குவரத்து சபைக்கு சொந்தமான வஸ்வண்டி பாதையைவிட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததால் ஏற்பட்ட விபத்து சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் இவ்விபத்து சம்பவம் தொடர்பில் பஸ்வண்டி சாரதி கைது செய்யப்பட்டள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிசார் தெருவித்தனர்.


மட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதான வீதியிலையே குறித்த விபத்து சம்பவம்மானது இடம்பெற்றுள்ளது. வெல்லவாய போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டியே இவ்வாறு இபத்துக்கு உள்ளாகியுள்ளது.

நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற மேற்படி விபத்து சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது.

பாண்டாரவளையில் இருந்து பயணிகளை எற்றிக்கொண்டு திருகோணமலையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது  சாரதியின் கவலையினம் காரணமாக வேகக்கட்டுப்பபாட்டை இழந்த நிலையில் வீதியைவிட்டு விலகி ஆற்றுப்பள்ளத்திற்குள் விழுந்ததாலையே குறித்த விபத்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மூன்று பயணிகள் காயமடைந்த நிலையில் மீட்க்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.