கொழும்பில் நீதிதுறை அதிகாரிகளின் மாநாடு!

பொதுநலவாய ஒன்றியத்தின் நீதி அமைச்சர்களின் நீதிதுறை அதிகாரிகளின் மாநாடு கொழும்பில் ஆரம்பமாகின்றது.


பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் திருமதி பற்றீசியா ஸ்கொட்லன் ஆகியோர் தலைமையில் இந்த மகாநாடு இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகின்றது.

இந்த மாநாடு எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தார்.

பொதுநலவாய நாடுகள் மத்தியில் நிலவும் சட்ட கட்டமைப்பு மற்றும் சட்டம் தொடர்பான அறிவை பரிமாறுதல், நீதிமன்ற வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சட்ட ரீதியிலான ஒத்துழைப்பு, சிவில் சட்ட கட்டமைப்பு மற்றும் ஊழலை இல்லாதொழித்தல், சட்ட கட்டமைப்பை ஒழுங்குறுத்துதல் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் மத்தியில் சட்டவாட்சி புரிந்துணர்வுடன் செயற்படுதல் தொடர்பாக இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.