கோத்தாவை டம்மியாக்கும் சஜித்!

இலத்திரனியல் திரையின்றி பேச முடியாது என்ற அச்சம் காரணமாகவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ விவாதம் பற்றி எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்காமல் உள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாபலகம பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சஜித் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய சூழ்நிலையில் எனது பிரதிவாதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதான வேட்பாளராக இருக்கிறார். எனவேதான் அவரை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கின்றேன்.

எனினும் இலத்திரனியல் திரை இன்றி பேச முடியாது என்ற அச்சத்திலிலேயே அவர் விவாதம் பற்றி எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்காமல் இருக்கிறார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தனித்து விவாதத்தில் கலந்துகொள்ள அச்சம் என்றால் மஹிந்த ராஜபக்ஷவையும் உடன் அழைத்து வரலாம். மஹிந்தவை மாத்திரமின்றி ஆயிரக்கணக்கானோரை அழைத்து வந்தாலும் எனது தரப்பில் நான் தனியாகவே பங்குபற்றுவேன். அதற்கான பலமும் தைரியமும் என்னிடம் இருக்கிறது. இவ்வாறு விவாதங்களை நடத்தினால் மாத்திரமே மக்களால் நாட்டை ஆட்சி செய்வதற்கு தகுதியான தலைவர் யார் என்பதை தெளிவாக இனங்காண முடியும்” என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஜனநாயக தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்வைத்த நேரடி விவாத சவாலை ஏற்கத் தயார் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.