ஹிஸ்புல்லாஹ்வின் பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் கூச்சல்!

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரும், ஜனாதிபதி வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் கல்குடா தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்றிரவு இடம்பெற்றது.


குறித்த கூட்டம் வாழைச்சேனை ஹைறாத் வீதியில் நேற்று இரவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.

இதன்போது சிலர் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேவேளை குறித்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் குழப்பங்கள் ஏற்படும் என்ற காரணத்தினால் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்து.

பாதுகாப்பில் வாழைச்சேனை, கரடியனாறு பொலிஸார் வருகை தந்ததுடன், வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கடமையில் ஈடுபட்டனர்.

எனினும் தேர்தல் பிரச்சார மேடைகளில் ஆதரவாளர்கள் உரையாற்றும் போது குழுமியிருந்த சிலர் கூச்சலிட்டு குழப்பத்தினை ஏற்படுத்த முற்பட்ட போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி நிலைமையை சீர் செய்துள்ளனர்.


ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் யூ.எல்.அஹமட் லெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாகரை பிரதேச சபை உறுப்பினர்களாக எம்.தாஹிர், எம்.றஹீம், ஊடகவியலாளர் எம்.பாரிஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.