ட்ரம்புக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான விசாரணை ஆரம்பம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது.


அடுத்த வாரத்தில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

வழக்கு விசாரணையின் முதலாவது அமர்வில் இராஜாங்கத் திணைக்களத்தின் 3 அதிகாரிகள் சாட்சியமளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிராக பகிரங்க விசாரணைகளை முன்னெடுக்குமாறு உக்ரைன் அரசாங்கத்தை வலியுறுத்தியதாக தெரிவித்து ட்ரம்ப்புக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

ட்ரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் அவர் பதவி விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.