இராணுவ வாகனங்கள் மீது கற்களை வீசித் தாக்குதல்!

சிரியாவின் வடக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட ரஷ்ய, துருக்கி இராணுவ வாகனங்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சிரியாவின் வடக்குப் பகுதியில் ரஷ்ய படையினரும், துருக்கி இராணுவமும் இணைந்து நேற்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது பொதுமக்கள் கற்களை வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வட பகுதியிலுள்ள குர்திஷ் போராளிகள் மீது துருக்கி இராணுவம், ஒரு மாதத்துக்கு முன்பு தாக்குதலை தொடங்கியது.

இந்த தாக்குதலை நிபந்தனையின் பேரில், துருக்கி அரசாங்கம் பின்னர் நிறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.