கொழும்பில் காற்று மாசு குறைவடைந்துள்ளதாக அறிவிப்பு!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வளிமண்டலத்தில் அதிகரித்த தூசு துகள்களின் செறிவு சுட்டி தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.


தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் சரத் பிரேமசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது தூசு துகள்களின் செறிவு சுட்டி 50 ஆக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி தூசு துகள்களின் செறிவு சுட்டி 148 ஆக காணப்பட்டது.

ஆசிய நாடுகள் சிலவற்றில் தற்போது வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு சுட்டி அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் புது டெல்லியில் ஏற்பட்ட வளி மாசடைவு காரணமாக காற்றுடன் தூசு துகள்கள் கலக்கின்றமை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.