சுமங்கல தேரர் உண்ணாவிரதம்!

கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்பட்டமையை உறுதிப்படுத்துமாறு கோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்று கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கொழும்பு சுதந்திர சதுர்க்கத்தில் இன்று காலை முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமை தொடர்பாக 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என கோரியே இந்த உண்ணாவிரத போராட்டத்தினை அவர் முன்னெடுத்துள்ளார்.

அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கப்பட்டவர்களின் பட்டியலில் நந்தசேன கோத்தபாய ராஜபக்சவின் பெயர் இதுவரை உள்ளடக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தனது டுவிட்டர் தளத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எனவே, கோத்தபாய ராஜபக்ச தொடர்ந்தும் அமெரிக்கப் பிரஜை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையினை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.