8,000 இற்கும் அதிகமான பிக்குனிகள் வாக்களிப்பதில் சிக்கல்!

இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுமார் 8,000க்கும் அதிக பிக்குனிகள், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


எனவே பிக்குனிகள் தங்களது வாக்குகளை பயன்படுத்துவதற்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்குமாறு குறித்த ஆணைக்குழு தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் பிக்குனிகள் என்று குறிப்பிடப்பட்டு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படாமை மற்றும் புத்த சாசன அமைச்சின் ஊடாக பிக்குனிகளாக அவர்கள் பதிவுசெய்யப்படாமை போன்றவற்றால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை பயன்படுத்தகூடிய வகையில், பிக்குனிகளை அடையாளப்படுத்தும் அட்டையை பயன்படுத்தி, வாக்களிக்ககூடியவாறு பிக்குணிகளிற்கு விசேட அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் கோரியுள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.