கதிர்காமத்தில் துப்பாக்கிச்சூடு!

கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனமல்வில செல்ல கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


அத்துடன், சம்பவத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 4.55 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் , சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கைதுசெய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் துப்பாக்கி சூட்டிற்கான காரணம் தெரியவராத நிலையில் கதிர்காமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.