சாய்ந்தமருது முஸ்லிம்களுக்கு தனியான பிரதேச சபை - பசில்!!

நவம்பர் 17 திகதி புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பிறகு அவரின் முதலாவது கடமையாவது சாய்ந்தமருது பிரதேசத்திற்கு நகர சபை ஒன்றை வழங்குவதே என பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த மாதம் 16 ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முதல் பணி உங்கள் ஆணையை நிறைவேற்றுவதாகும்.

உங்களிடமிருந்து ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றேன். என்னவென்றால், “நகராட்சி மன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட என்னை அழைக்க வேண்டும்.”

நேற்று முன் தினம்(11) சாய்ந்தமருதில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வின்போதே இந்த உறுதி மொழியை வழங்கினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.