இஸ்ரேல் – காஸா எல்லையில் தொடர் தாக்குதல்!!

இஸ்ரேல் – காஸா எல்லையில் இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக இதுவரை 26 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.


தாக்குதல்களில் காயமடைந்த 63 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் காஸா – ஹமாஸ் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காஸா பிராந்தியத்திலுள்ள பலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் ஆயுதக் குழுவின் மிகமுக்கிய தலைவரான பஹா அபு அல் அட்டா இஸ்ரேலிய வான்தாக்குதலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் மீண்டும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

அல் அட்டா வெடிகுண்டு போன்றவரெனவும் உடனடியாக பயங்கரவாதத் தாக்குதல்களை அவரே திட்டமிடுபவரெனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இதற்குத் தக்க பதிலடி வழங்கப்படுமென பலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் குழு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.