பிரதமர் -தேர்தல் ஆணையாளர் அவசர சந்திப்பு!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க  தேர்தல் ஆணையாளருடன் அவசர சந்திப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


வடக்கு நிலவரங்கள் குறித்து ஆராய இன்று (சனிக்கிழமை) இந்த அவசர சந்திப்பு நடைபெற்றது.

வடக்கில் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் மக்கள் வாக்களிக்க நெருக்கடி ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. அத்துடன் மன்னாரிற்கு வாக்களிக்க சென்ற மக்கள் மீதும் நேற்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதையடுத்து, இன்று மாலை தேர்தல் ஆணையாளரை சந்தித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து எதுவித தகவல்களும் வெளியாகவில்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.