பிரதமர் பொதுத் தேர்தலுக்குச் செல்ல யோசனை!

அடுத்த பொதுத் தேர்தல் தொடர்பில் சபாநாயகர் மற்றும் நாடாளுமன்றக் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.


பிரதமர் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகர் தலைமையில் அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய கூட்டத்தை கூட்டி நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்வதற்கான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டின் 7ஆவது ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாளைக் காலை அவர் அநுராதபுரத்தில் பதவியை ஏற்று முற்பகல் 11 மணிக்கு கடமைகளை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றின் அங்கீகாரத்துடன் நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பின்னரே ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைக்க முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.