கழுத்து நெரிக்கப்பட்டு குழந்தை கொலை!

கல்னேவ, சியம்பவேல பகுதியில் குழந்தை ஒன்று கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


3 வயதும் 4 மாதங்களுமான குழந்தை ஒன்றே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

தன்னுடைய பாட்டியுடன் இருந்த குழந்தை காணாமல் போனதாக நேற்றையதினம் கல்னேவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.

குழந்தையின் பெற்றோர் வேலைக்கு சென்றதன் பின்னர் குழந்தை பாட்டியுடன் இருப்பதாகவும் அந்த நேரத்தில் ஒவ்வொரு நாளும் அயல் வீட்டில் இருக்கும் வீட்டிற்கு குழந்தையை எடுத்து செல்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த வீட்டை பொலிஸார் சோதனையிட்ட போது உரைப்பை ஒன்றை போடப்பட்டு வீட்டின் கிணற்றிற்கு அருகில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயல் வீட்டில் வசிக்கும் 22 வயதுடைய பெண் குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குழந்தையின் செய்கைகள் ஆத்திரமூட்டியதால் தாம் குழந்தையை கொலை செய்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ள நிலையில் பொலிஸார் அப்பெண்ணை கைது செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.