சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடை!

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


இதனால் இன்று (20) 9 மணி முதல் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, மற்றும் ஜா-எல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்குமே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட கனேமுல்ல, ரத்துபஸ்வல, இகல யாகொட, பகல யாகொட, எம்பரலுவ மற்றும் வெலிவேரிய ஆகிய பகுதிகளுக்கும் இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.