கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு!

கொழும்பின் பல பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


அபிவிருத்தி நடிவடிக்கை காரணமாக கொழும்பை அண்டிய பல பிரதேசங்களில் நாளை (சனிக்கழமை) காலை 9 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அந்தவகையில் கொலன்னாவை நகர சபைக்கு உட்பட்ட மொரகஸ்முல்ல, ஒபேசேக்கரபுர, பண்டாரநாயக்கபுர, ராஜகிரிய, நாவல, கொஸ்வத்த ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படடுள்ளது.

அதேவேளை ராஜகிரிய தொடக்கம் நாவல பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.