சபாநாயகர் பதவி வாசுதேவவுக்கா!!

புதிய சபாநாயகராக வாசுதேவ நாணயக்கார நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க தனது பிரதமர் பதவியினை இராஜினாமா செய்ததுடன், நேற்றைய தினம் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

இன்றைய தினம் 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டது.

இந்தநிலையில் தற்போது சபாநாயகர் பதவியிலும் மாற்றம் செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த பதவிக்கு வாசுதேவ நாணயக்கார நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.