ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்க அனுமதியுங்கள் -இந்திய மீனவா்கள்!!
எதிர்வரும் 29ந் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை சந்திக்க அனுமதிக்குமாறுகோாி இந்தியா- இராமேஸ்வரம் மீனவா்கள் இன்று தொடக்கம் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா செல்லும் ஜனாதிபதியை தாங்கள் சந்தித்து பேச மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த மீனவர்கள் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.
இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக மீனவர்கள் மற்றும் படகுகள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவதை கண்டித்து, இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் மீனவர் பிரச்சனை குறித்து பேசி நிரந்தர தீர்வுகாண வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் இலங்கையில் மீட்கப்படாத தமது படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்கவும் நல்ல நிலையிலுள்ள படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கவும், கிடப்பில் போடப்பட்டுள்ள இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையை துவங்கி தீர்வு கானப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 850க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரம் இடப்பட்டுள்ளது.
அதோடு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் முற்றிலும் வேலை இழப்பதோடு நாளொன்றுக்கு ரூ 4 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்தியா செல்லும் ஜனாதிபதியை தாங்கள் சந்தித்து பேச மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த மீனவர்கள் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.
இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக மீனவர்கள் மற்றும் படகுகள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவதை கண்டித்து, இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் மீனவர் பிரச்சனை குறித்து பேசி நிரந்தர தீர்வுகாண வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் இலங்கையில் மீட்கப்படாத தமது படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்கவும் நல்ல நிலையிலுள்ள படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கவும், கிடப்பில் போடப்பட்டுள்ள இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையை துவங்கி தீர்வு கானப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 850க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரம் இடப்பட்டுள்ளது.
அதோடு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் முற்றிலும் வேலை இழப்பதோடு நாளொன்றுக்கு ரூ 4 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை