கையூட்டு பெற்ற உதவி பொலிஸ் அத்தியட்சகர் கைது!

சிலாபம் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.


இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டே அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கைதாகியுள்ளார்.

சிலாபம் பிரதேசத்திலுள்ள கோயில் ஒன்றில் காணாமற்போன இரண்டு வலம்புரி சங்குகளை தேடிக்கொடுத்தல் மற்றும் ஆலயத்தின் பணிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி முன்னெடுப்பதற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகரால் இலஞ்சம் கோரப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது.

இந்த ஆலய வளாகத்தில் இலஞ்சம் பெற்ற போதே அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது.

கைது செய்யப்பட்டுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் தொடர்ந்து விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் அவரை நீதிமன்றமத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.