ஹொங்கொங்கில் வரலாறு காணாத அளவில் மக்கள் வாக்களிப்பு!
ஹொங்கொங்கில் நடைபெற்றுவரும் மாவட்ட சபைத் தேர்தலில் மக்கள் வரலாறு காணாதவாறு வாக்களிப்பில் ஆர்வம் செலுத்தியுள்ளனர்.
இதன்படி, வாக்குப் பதிவு ஆரம்பமாகி சுமார் 5 மணி நேரத்திலேயே 56 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் 7.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையில் 4.1 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
2015ஆம் ஆண்டு தேர்தலின் போது 36 சதவீத வாக்குப் பதிவே இடம்பெற்றிருந்த நிலையில் இம்முறை மக்கள் இரட்டிப்பாக வாக்களித்துள்ளனர்.
கடந்த ஐந்து மாதங்களாக அமைதியின்மை, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகளுக்குப் பின்னரான மக்களின் இந்த வாக்குகள் சீன அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை தெரிவிக்கும் என ஹொங்கொங் தலைமைக்கு எதிரான எதிர்ப்புப் குழுக்கள் எதிர்பார்த்துள்ளன.
இதேவேளை, தேர்தலுக்கு முன்னதாக ஜனநாயக சார்பு எதிர்ப்புக் குழுக்கள் மக்களை இடையூறு செய்ய வேண்டாம் என வலியுறுத்தியிருந்த நிலையில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறாது சுமூகமாக தேர்தல் இடம்பெற்று வருகின்றது.
இந்த தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுபெறவுள்ள மாலை 5.30 மணிக்குள் 2.3 மில்லியன் மக்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இதன்படி, வாக்குப் பதிவு ஆரம்பமாகி சுமார் 5 மணி நேரத்திலேயே 56 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் 7.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையில் 4.1 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
2015ஆம் ஆண்டு தேர்தலின் போது 36 சதவீத வாக்குப் பதிவே இடம்பெற்றிருந்த நிலையில் இம்முறை மக்கள் இரட்டிப்பாக வாக்களித்துள்ளனர்.
கடந்த ஐந்து மாதங்களாக அமைதியின்மை, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகளுக்குப் பின்னரான மக்களின் இந்த வாக்குகள் சீன அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை தெரிவிக்கும் என ஹொங்கொங் தலைமைக்கு எதிரான எதிர்ப்புப் குழுக்கள் எதிர்பார்த்துள்ளன.
இதேவேளை, தேர்தலுக்கு முன்னதாக ஜனநாயக சார்பு எதிர்ப்புக் குழுக்கள் மக்களை இடையூறு செய்ய வேண்டாம் என வலியுறுத்தியிருந்த நிலையில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறாது சுமூகமாக தேர்தல் இடம்பெற்று வருகின்றது.
இந்த தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுபெறவுள்ள மாலை 5.30 மணிக்குள் 2.3 மில்லியன் மக்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை