எதிர்க்கட்சித் தலைவர் குறித்து முக்கிய அறிவிப்பு!!

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து தேர்தலுக்கு பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வின்போது அறிவிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் தெரிவித்தார்.


தேர்தலுக்கு பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி கூடவுள்ளது.

இதன்போதே சபாநாயகர் கரு ஜயசூரியவினால் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பாக அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கோரி சபாநாயகருக்கு கடிதம் மூலம் கோரியுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் 40 பேர் கையெழுத்திட்டு அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி சபாநாயகருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தோல்வியடைந்தமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஏனைய சிலரே காரணம் என்று சஜித் தரப்பு குற்றஞ்சாட்டியது.

அத்தோடு சஜித் பிரேமதாசவுக்கு கட்சி தலைமைத்துவத்தை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.