தென்னிலங்கையில் மீண்டும் வந்தது தமிழ்!

தென்னிலங்கையில் இனவாதிகள் சிலரால் தமிழ் மொழி அகற்றப்பட்டு சேதப்படுத்தப்பட்ட பெயர்ப்பலகை, மீண்டும் தமிழுடன் மும்மொழிகளிலும் நிறுவப்பட்டுள்ளதாக பாணந்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாட்டின் சில பகுதிகளில் தமிழ் மொழியில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்ட இடங்களில் பலகைகள் சேதப்படுத்தப்பட்டதுடன், தமிழ்ப் பெயர்களும் விசமிகளால் அழிக்கப்பட்டிருந்தன.

இந்த விவகாரம் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதையடுத்து, வீதிகளில் காணப்படும் தமிழ் பெயர்ப் பலகைகளை சேதப்படுத்துவோரை கைது செய்யுமாறு பிரதமர் அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச விடுத்த குறித்த உத்தரவையடுத்து மீண்டும் உடனடியாக தமிழுடன் மும்மொழிகளிலும் பலகைகள் நிறுவப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நாசகார வேலைகளில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பில், பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.