கொழும்பு வானிலையில் ஏற்பட்ட மாற்றம்!!

நாட்டில் வட கிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்ற நிலையில் நாடளாவிய ரீதியாக பலத்த மழை பெய்துவருகின்றது.


அந்தவகையில் கொழும்பில் தற்போது கடும் மழை பெய்துவரும் வருவதனால் தற்போது நகர் முழுவதும் பனி மூடியுள்ளது. எனவே வாகன சாரதிகள் மின் விளக்குகளை ஒளிரவிட்டு வாகனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந் நிலைமை 2019 நவம்பர் 27ஆம் திகதியிலிருந்து நாடு முழுவதும் முழுமையாக தாபிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.