ரிஷாட்டின் வாகனம் மீது தாக்குதல்!!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயணித்த வாகன தொடரணியின் மீது முந்தல் – கனமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்மந்தமாக நான்கு பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


முன்னாள் அமைச்சர் ரிஷாட் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முந்தல் பிரதேசத்தில் தனது ஆதரவாளர்களை சந்திக்க சென்றபோது, அவரின் வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

முந்தல் கடைமோட்டை பகுதியில் வழிமறித்த 10 பேர் கொண்ட கும்பல், கற்களாலும் கூரிய ஆயுதங்களாலும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் ரிஷாட் பதியுதீனின் வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் சேதமடைந்தன. மேலும்  சிலர் காயமடைந்தனர்.

எனினும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் காயங்களின்றி உயிர் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.