சுன்னாகம் சந்தையில் களேபரம்!!

யாழ் சுன்னாகம் மீன் சந்தையில் கழிவகற்றல் பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரத் தொழிலாளியை வெட்டுக் கத்தியை காண்பித்து மிரட்டிய மீன் வியாபாரி ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ,

இன்று காலை சுன்னாகம் மீன் சந்தையில் கழிவகற்றல் பணியில் சுகாதாரத் தொழிலாளி ஈடுப்பட்டபோது வியாபாரி ஒருவர் கழிவகற்றல் ஒழுங்காக நடைபெறுவதில்லை என தொழிலாளியிடம் கேட்டுள்ளார்.

அதனால்இதன் காரணமாக இருவருக்கும் இடையே இடம்பெற்ற முறுகல் நிலையையடுத்து தொழிலாளிகள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவத்தை அறிந்த வலி.தெற்கு பிரதேச சபைத் தவிசாளர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பட்டு செய்துள்ளார்.

இதனையடுத்து சுன்னாகம் மீன் சந்தைக்குச் சென்ற பொலிஸார், வியாபாரியை கைது செய்து இழுத்துச் சென்றதாக சந்தையில் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவத்தையடுத்து சுகாதாரத் தொழிலாளிகள் தமது கடமையை இடைநிறுத்தி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.