வவுனியாவில் வீடு புகுந்து தாக்குதல்!!

வவுனியா ஓயார் சின்னக்குளம் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இனந்தெரியாத நபர்கள் வீட்டு வளவினுள் புகுந்து வீட்டின் யன்னல், கதவுகளை தாக்கியுள்ளனர். அத்தோடு, வீட்டிலிருந்த இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து வீட்டிலுள்ளவர்கள் சத்தமிட்டுள்ளனர். கூக்குரல் சத்தத்தைகேட்டு அயலவர்கள் அவ்விடத்திற்கு வருவதை அறிந்த குறித்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில்  திருச்செல்வம் (வயது – 73), கலா (வயது – 60) என்ற கணவன் மனைவி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.