இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு!!📷

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவீரர் நாள் நினைவுகூரல் இடம்பெற்றது.


இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தலைமையில் இன்று (புதன்கிழமை) மாலை மாவீரர்கள் நினைவுகூரல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நினைவுகூரலில் முதல் சுடரை சேனாதிராசா ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், யாழ். மாநகரசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.