இராணுவ முகாம்களை அகற்றுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

நாட்டில் இரா­ணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமையாது நாட்டையும் மக்களையும் பாது­காப்­பிற்கே அன்றி சிறு­பான்மை மக்­களை துன்­பப்­ப­டுத்­து­வ­தற்கு அல்ல என மல்­வத்தை பீடத்தின் அனு­நா­யக்கர் வண. திம்­புல்­கும்­புறே விம­ல­தம்ம தேரர் தெரி­வித்­துள்ளார்.


உயர்­கல்வி அமைச்சர் பந்­துல குண­வர்­தன மல்­வத்தை பீடத்தின் அனு­நா­யக்­கரை சந்­தித்து ஆசி­பெற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் ஜனா­தி­பதி பத­விக்கு வரு­பவர் தமிழ் முஸ்லிம் மக்­க­ளது ஆத­ரவு இல்­லாமல் தெரிவு செய்­யப்­பட முடி­யாது என, தமிழ் முஸ்லிம் அர­சியல் வாதிகள் நினைத்­ததை , இம்­முறை நடை பெற்ற தேர்தல் மாற்ரி அமைத்துள்ள்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனா­தி­பதி கோட்டா­பய ராஜ­பக்ஷ சகல இனத்­த­வர்­க­ளுக்கும் வேறு­பா­டின்றி சேவை செய்ய தன்னை அர்ப்­ப­ணிக்க கூடி­யவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதோடு நாட்டில் எத்­த­கைய அபி­வி­ருத்­திகள் மேற்­கொண்­டாலும் அவை தேசிய பாது­காப்புக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யக்­கூ­டாது என்­பதை ஜனா­தி­பதி நன்கு விளங்கிகொண்டு செயற்­ப­டு­வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முழு நாட்­டிலும் அபி­வி­ருத்­திகள் மேற்­கொள்ளும் போது வடக்கு கிழக்கில் அமைக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ முகாம்கள் அகற்­றப்­படக் கூடாது என்றும், அவை அனைத்து மக்­களின் பாது­காப்­பிற்­கா­கவே ‍அமைக்­கப்­பட்­டுள்­ளதாகவும் தேரர் கூறியுள்ளார்.

ஜனா­தி­ப­தியின் பத­வி­யேற்பு வை ­ப­வத்தில் அவர் நிகழ்த்­திய உரையைப் பார்க்­கும்­போது ஒரு நல்ல பய­ணத்தை ஜனாதிபதி கோடாபய ஆரம்­பித்­துள்ளார் என்­பது தெளிவாக புலனாகின்றதாக தெரிவித்த அவர், அரசியல் பேதங்களை மறந்து புதிய ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பினை வழங்கி நாட்டின் அபிவிருத்தியினை மேலெழச்செய்ய சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.