உடைப்பெடுக்கும் அபாயத்தில் முல்லைத்தீவு மருதங்குளம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்சசியாக பெய்துவரும் கன மழை காரணமாக, மாவட்டத்திலுள்ள குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பி வழிகின்றது.
இந்நிலையில் முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலகத்தில், வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரிவுக்குட்பட்ட, புத்துவெட்டுவான் மருதங்குளம் உடைப்பெடுக்கும் அபாயத்திலுள்ளது.
குறித்த மருதங்குளமானது சுமார் 9.5 அடிக்கு நீரை தேக்கிவைத்திருக்கக்கூடிய குளமாகும்.
அத்துடன் , அண்மைய நாட்களாக பெய்துவரும் கன மழை காரணமாக இக்குளத்தில் நீர் நிரம்பிக் காணப்படுவதுடன், அதன் அணைக் கட்டுப் பகுதியால் பாரிய அளவில் நீர்க் கசிவும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அணை கட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய நீர்க்கசிவினை தடுப்பதற்கான முயற்சியில் நீர்ப்பசனத் திணைக்களத்தினர்,இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டபோதும் அந்த முயற்சி பயனளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக நீர்க்கசிவு ஏற்படும் பகுதியில் ஆறு அடியளவில் நீர்தேங்கி நிற்பதால், நீர்க்கசிவை தடுக்கும் பணி கைவிடப்பட்டுள்ள நிலையில் குளத்தின் வால்கட்டுப் பகுதியால், சுமார் இரண்டு அடியளவில் நீரை வெளியேற்றுவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு நீரை வெளியேற்றி, குளத்தில் நீரை குறைப்பதன் மூலம், நீர்க்சிவை தடுக்க முடியுமென வவுனிக்குளம் நீர்ப்பாசனத்திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வெட்டியகற்றப்படும் நீரானது, பாதுகாப்பாக அக்கராயன் குளத்தினைச் சென்றடையுமெனவும், இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது எனவும் கூறப்பட்டுகின்றது.
எனினும் இது தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தாம் அப்பகுதி பொதுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்நிலையில் முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலகத்தில், வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரிவுக்குட்பட்ட, புத்துவெட்டுவான் மருதங்குளம் உடைப்பெடுக்கும் அபாயத்திலுள்ளது.
குறித்த மருதங்குளமானது சுமார் 9.5 அடிக்கு நீரை தேக்கிவைத்திருக்கக்கூடிய குளமாகும்.
அத்துடன் , அண்மைய நாட்களாக பெய்துவரும் கன மழை காரணமாக இக்குளத்தில் நீர் நிரம்பிக் காணப்படுவதுடன், அதன் அணைக் கட்டுப் பகுதியால் பாரிய அளவில் நீர்க் கசிவும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அணை கட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய நீர்க்கசிவினை தடுப்பதற்கான முயற்சியில் நீர்ப்பசனத் திணைக்களத்தினர்,இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டபோதும் அந்த முயற்சி பயனளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக நீர்க்கசிவு ஏற்படும் பகுதியில் ஆறு அடியளவில் நீர்தேங்கி நிற்பதால், நீர்க்கசிவை தடுக்கும் பணி கைவிடப்பட்டுள்ள நிலையில் குளத்தின் வால்கட்டுப் பகுதியால், சுமார் இரண்டு அடியளவில் நீரை வெளியேற்றுவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு நீரை வெளியேற்றி, குளத்தில் நீரை குறைப்பதன் மூலம், நீர்க்சிவை தடுக்க முடியுமென வவுனிக்குளம் நீர்ப்பாசனத்திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வெட்டியகற்றப்படும் நீரானது, பாதுகாப்பாக அக்கராயன் குளத்தினைச் சென்றடையுமெனவும், இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது எனவும் கூறப்பட்டுகின்றது.
எனினும் இது தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தாம் அப்பகுதி பொதுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை