ரணில்,சஜித் நவ 17 மூட்டை முடிச்சுகளுடன் வீடு செல்வார்கள்!
"நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச நிச்சயம் வெற்றியடைந்தே தீருவார். எனவே, மறுநாள் 17ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், அந்தக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவும் மூட்டை முடிச்சுகளுடன் வீடு செல்வார்கள்."
- இவ்வாறு கூறினார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச.
கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்து பண்டாரகமவில் நேற்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் போதைப்பொருள் வியாபாரத்துக்கும் அடிமையாகியுள்ளார்கள். இதற்கு இந்த அரசே பொறுப்புக்கூற வேண்டும்.
மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கும்போது வாழ்வதற்காக நடுத்தர மக்கள் தவறான வியாபாரங்களைச் செய்கின்றார்கள்.
எனவே, நவம்பர் 17 ஆம் திகதிக்கு பின்னர் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் உற்பத்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சிறந்ததாகும்.
நவம்பர் 17ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் மலரப் போகின்ற எமது ஆட்சியில் தேசிய பாதுகாப்பும், சட்டம் - ஒழுங்கும் முறையாக நிலைநாட்டப்படும். வீழ்ச்சியடைந்துள்ள கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படும்" - என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
- இவ்வாறு கூறினார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச.
கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்து பண்டாரகமவில் நேற்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் போதைப்பொருள் வியாபாரத்துக்கும் அடிமையாகியுள்ளார்கள். இதற்கு இந்த அரசே பொறுப்புக்கூற வேண்டும்.
மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கும்போது வாழ்வதற்காக நடுத்தர மக்கள் தவறான வியாபாரங்களைச் செய்கின்றார்கள்.
எனவே, நவம்பர் 17 ஆம் திகதிக்கு பின்னர் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் உற்பத்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சிறந்ததாகும்.
நவம்பர் 17ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் மலரப் போகின்ற எமது ஆட்சியில் தேசிய பாதுகாப்பும், சட்டம் - ஒழுங்கும் முறையாக நிலைநாட்டப்படும். வீழ்ச்சியடைந்துள்ள கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படும்" - என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை