காதலென்பது யாதெனில்..!!

என்னை எவ்வளவு
பிடிக்கும் சொல்லுடா
எனும் உன் கேள்விக்கு..

ஒரு புன்னகையும்..
நெற்றிக்கு ஒரு முத்தமும்..
நிரப்பமாய் முடித்துவைக்கிறது;
குழந்தையாய் மார்பில்
நீ சுருண்டுக்கொள்ள
போதுமானதாய் இருக்குறது..!

நம் காதல்; நம்முடைய காதல்;
நமக்கான காதல்; நாமே காதல்..!

-கயூ ராணி-
07.11.2019
யாழ்ப்பாணம் 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.