தேர்தலுக்குப் பின்னரே ஒப்பந்தம் தொடர்பில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவோம்!

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரே மிலேனியம் செலன்ஞ் கோப்பரேஷன் ஒப்பந்தம் தொடர்பில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அமெரிக்கா நேற்று அறிவித்துள்ளது.


இதனடிப்படையில் ஒப்பந்தம் கைச்சாத்திடல் மற்றும் பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெறல் ஆகிய செயற்பாடுகளை எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையுடன் முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

மிலேனியம் செலன்ஞ் கோப்பரேஷன் மூலம் 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையை அமெரிக்கா வரவேற்கின்றது. இது இலங்கையில் வாழும் 11 மில்லியன் மக்களுக்கு பயனளிப்பதாக அமையும்.

இந் நிதியுதவியைக் கொண்டு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மூலம் நாட்டின் போக்குவரத்து நெரிசலை பெரிதும் குறைக்கலாம். இது பொது போக்குவரத்தையும் மாகாண வீதிகளையும் மேம்படுத்துவதாக அமையும்.

இலங்கையின் காணி நிர்வாகத்தை மேம்படுத்தும். இந் நிதியுதவி காரணமாக அமெரிக்கா எந்தவொரு காணிக்கும் உரித்துடையதாகவோ குத்தகையை கொண்டதாகவோ இருக்காது. இந்த 05 வருட திட்டத்தை இலங்கையே மேற்பார்வை மற்றும் முகாமைத்துவம் செய்யும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.