ஆப்கானில் கூட்டுப்படை தாக்குதல்!!

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.


இந்நிலையில், கோஸ்ட் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது, அண்மையில் பிரசவம் முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பெண், பிறந்த குழந்தை, மற்றொரு குழந்தை, குழந்தையின் தந்தை மற்றும் ஒரு கிராமவாசி உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

இதனை ஆளுநருக்கான செய்தி தொடர்பு அதிகாரி தலேப் மங்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.

வான்வழித் தாக்குதலின் போது கார் ஒன்று தாக்கப்பட்டதிலேயே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணை நடந்து வருவதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.