எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம்!

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டது.


உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி சர்வதேச ரீதியாக நினைவுகூரப்படுகிறது.

அந்தவகையில் இலங்கையில் இம்முறை “சமூகங்கள் நிலைமையை மாற்றலாம்” என்ற தொனிப்பொருளில் எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படுவதுடன், அதனை முன்னிறுத்தி குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பொது வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வு ஊர்வலம் வவுனியா பொது வைத்தியசாலையில் ஆரம்பமாகி கண்டி வீதி வழியாக, பசார் வீதியை அடைந்து மீண்டும் வைத்தியசாலையை சென்றடைந்தது.

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸார், தாதிய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.