தொடருந்துகளில் யாசகத்தில் ஈடுபடுவது தடை!!

இன்று முதல் தொடருந்துகளில் யாசகத்தில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.


இதற்கமைய, தொடருந்துகளில் யாசகத்தில் ஈடுபடுபவர்களையும், அவசியமற்ற முறையில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுபவர்களையும் அதிலிருந்து வெளியேற்றுவதற்கு இன்று முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாசகர்கள் மற்றும் அவசியமற்ற முறையில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் பயணிகளிடமிருந்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக தொடருந்து திணைக்கள பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்று முதல் அவர்களை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.