பிரபல பாடகி மாதங்கியின் தந்தை சாவடைந்தார் “லங்கா ராணி” நூலாசிரியர்!!

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் ஈரோஸ் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவருமான அருளர் என்றழைக்கப்படும் அருட்பிரகாசம் இன்று(03.12.2019) யாழ்ப்பாணத்தில் காலமானார்.


1983 ஆம் ஆண்டு ஜூலையில் நடந்த இனக்கலவரத்தை வரலாற்று பதிவாக “லங்கா ராணி” என்ற நூலாக பல வருடங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார்.

மேலும் அவரது இறுதிக்காலம் வரை ஈரோஸ் அமைப்பின் வெகுஜன அமைப்பாகிய ஈழவர் ஜனநாயக முன்னணியின் (EDF) செயலாளர் நாயகமாக இருந்தார்.

அத்துடன் “Missing Home Land in Sri Lanka” என்ற நூல் மூலம் ஈழத்தமிழர்களின் வரலாற்றினை வெளிக்கொண்டு வந்திருந்தார்.

MIA என்றழைக்கப்படும் பிரபல பாடகி மாதங்கியின் தந்தையே அருட்பிரகாசம் ஆவார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.