வவுனியாவில் விபத்து - இளைஞர் பலி!!

வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் ஏ9 வீதியில் நின்ற மாட்டுடன் மோதியுள்ளனர்.

இதன்போது தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் எதிரில் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்தில் வத்தளையைச் சேர்ந்த 21 வயதுடைய கிருபாகரன் துஸ்யந்தன் உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த ரஞ்சித்குமார் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இளைஞர்களின் மோட்டார் சைக்கிளில் மோதுண்ட மாடும் உயிரிழந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.